வியாழன், ஜனவரி 16, 2014

கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை காய்ந்த சமூலம் விற்பனைக்கு ..

நாளுக்கு நாள் கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகள் அதிமாகி கொண்டு வருகிறார்கள் ..
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் ,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தம் ,உணவில் ஏற்படுகிற விஷத்தன்மை ,குடி நோய் ,செயற்கை உணவுகள் ,துரித உணவுகள் என்று காரணங்கள் பல இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்பிற்கு இது வரை மக்கள் பார்க்கிற சிகிச்சைகள் டயாலிசிஸ் ஆரம்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று நீள்கிறது ...

எத்தனை சிறுநீரக நோயாளிகளால் டயாலிசிஸ் செலவை ஏற்க முடிகிறது ..
எத்தனை  சிறுநீரக நோயாளிகளால் மாற்று சிறுநீரகத்தை ஏற்பாடு செய்ய முடிகிறது ,தானமாக பெற முடிகிறது ?

இதற்க்கு முன் உள்ள எனது கட்டுரைகிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்பிற்கு  நல்ல மருந்து -பூனை மீசை என்ற தலைப்பை படித்து ( இப்போது படிக்க இங்கே கிளிக் செய்யவும் பல நபர்கள் என்னை பூனை மீசை செடிக்காக தொடர்பு கொண்டனர் ..எப்படியாவது உதவி செய்யுங்கள் ..கொஞ்சமாவது தாருங்கள் ,எங்கே கிடைக்கும் ..என்னை சிந்திக்க வைத்தது ...

எனது மானசீக குரு வைத்ய  உஸ்மான அலி அவர்கள் என்னை போன்ற மருத்துவர்களுக்கு சொல்லி பல சிறுநீரக நோயாளிகளை சரி வர பராமரிக்க ,டயாலிசிஸ் அளவை குறைக்க ,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தேவைப்படாமல் இருக்க இந்த பயன்படும் ஆராய்ச்சியில் ஈடு படுங்கள் என்று எங்களை தூண்டியவர் அவர்க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ,மேலும் சித்த மருத்துவர் திருநாராயணன் அவர்களுக்கும் ,என்னை எப்போதும் வழிகாட்டும் எனது சகோதரர் மருத்துவர் சித்தீக் அலி அவர்களுக்கும் நான் நன்றி உளமார  கூற கடமைப்பட்டுள்ளேன் .. 




பூனை மீசை செடியை முதலில் 
வீட்டில் வைத்து வளர்த்து பார்த்தேன் பின்னர் எனது மருத்துவ மனையில் தொட்டியில் வளர்த்து பார்த்தேன் ,மக்களுக்கு அடையாளம் காட்ட உதவியதே தவிர நோயாளிக்கு கொடுக்கும் அளவுக்கு கிடக்கவில்லை ..பின்னர் யோசித்தேன் என்ன செய்யலாம் அதிக அளவில் பயிரிட வேண்டுமே ?

என்னிடம் நிலம் இல்லை ,நண்பர் ஒருவரின் தென்னை தோப்புக்குள் வளர்க்க ஏற்பாடு செய்தேன் ..பூச்சி மருந்துகள் இடாத ஒரு இயற்கை விவசாயி அவர் ,ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட இயற்கை எரு உரமிட்டு பன்படுத்தினோம்.இந்த இடம் மலை அடிவாரம் ..ஊர் வடகரை ..பின்னர் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பூனை மீசை செடிகளை மருத்துவர் மைக்கேல் ஜெயராஜு அய்யா அவர்களிடம் பெற்றேன் ..

பூனை மீசை செடி வளர்ந்து வரும் போது நிறைய விவசாயம் கற்றோம் .. ஆடு மேயாது என்று ஆனந்தபட்டால் நிறைய மயில்கள் வந்து செடிகள் நாசம் செய்தது ,நிற்காத தொடர் மழை வந்து களை பறிக்க முடியாது கஷ்டப்படுத்தியது ,செடிகளின் இலைகளை பூச்சிகள் அரித்தது ..கடைசியில் தோற்று நின்றேன் ..இரண்டு வருட விவசாய அனுபவம் என்னை ஏன் இதை செய்ய ஆரம்பித்தேன் என்று தோணுகிற அளவுக்கு வருத்தத்தை கொடுத்தது ...தோல்விகள் பாடம் புகட்டியது ,தோல்விகள் எனக்கு பல வழிகளை கற்று கொடுத்தது ...இப்போது நீங்கள் பூனை மீசை காய்ந்த சமூலம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிற அளவுக்கு என்னை உருவாக்கிருக்கிறது ...


உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ,நபர்கள் ,நோயாளிகள் சிறுநீரக நோயால் பாதிக்கபட்டால் சொல்லுங்கள் எங்களால் இப்போது பூனை மீசை காய்ந்த சமூலம் எங்களால் தர இயலும் ..

குறைந்தது நூறு கிராம முதல் -நூறு கிலோ வரை இப்போது தர இயலும் ..

பூனை மீசை -காய்ந்த செடியை எப்படி பயன்படுத்துவது ?

இருபது கிராம் காய்ந்த பூனை மீசை சமூலம் + நானூறு மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஐம்பது மிலியாக வற்ற வைத்து காலை வெறும் வயிற்றில் அதே போல் மாலையும் இருபது கிராம் பூனை மீசை செடியில் தயாரித்த குடிநீர் ஐம்பது மிலி வெறும் வயிற்றில் பருகுதல் பலன் தரும் ..

பூனை மீசை குடிநீரை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் ?

இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும் ..

அடிக்கடி டயாலிசிஸ் செய்கிற தேவை இருக்காது ..
டயாலிசிஸ் செய்த பின் நோயாளிக்கு ஏற்படுகிற நிம்மதி நிலைக்கும் ..
சிறுநீரகத்திற்கு  சக்தி கிடைக்கும் ..

பூனை மீசை குடிநீரால் கிட்னி பெயிலியர் பூரண குணம் கிடைக்குமா ? முற்றிலும் குணம் கிடைக்குமா ?

முற்றிலும் குணமாகுமா என்பதை போலி மருத்துவர்கள் போல் வாக்கு தர இயலாது ..ஆனால் பல ஆராய்ச்சிகள் இரத்தத்தில் உள்ள அதிக யூரியா ,க்ரியாடினின் அளவை குறைக்க உதவுகிறது என்பது சொல்கிறது ,நிச்சயமாக உப்பு சத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் ..நல்ல மாற்று மருந்தாக இது செயல்படும் ..நோயாளியின் மற்ற உடல்  தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் ,பலசாலியாக இருந்தால் நோய் முழுவதும் குணம் ஆக வாய்ப்புள்ளது ..

ஆங்கில மருந்தை பயன்படுத்தும் போது இந்த மருந்தை பயன்படுத்தலாமா ?
எந்த ஆங்கில மருந்தோடும் சேர்த்து பயன்படுத்தலாம் 

டயாலிசிஸ் செய்கிற போதும் பயன்படுத்தலாமா ?
பயன்படுத்தலாம் .

எவ்வளவு காலம் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் ?
மிக குறைந்த நாட்களிலே இந்த மருந்தின் பலன் தெரியும் ..இரத்தத்தில் உள்ள உப்பு சத்தின் அளவை பொருத்து எவ்வளவு நாட்கள் தொடர வேண்டும் என்பது முடிவு செய்யலாம் 

இந்த மருந்துக்கு அதிகம் செலவாகுமா ?
மருந்தின் விலை அதிகம் இல்லை 

மருந்து எந்த அளவுகளில் கிடைக்கும் ?
ஒரு வேலை சாப்பிடுகிற அளவான இருபது கிராம் தனி தனி பாக்கெட்டுகளில் கிடைக்கும் 

மருந்தை எப்படி வாங்குவது ?
பேங்கில் பணம் டெபாசிட் செய்தால் கூரியரில் மருந்தை பெற்று கொள்ளலாம்.

பேங்க் விவரம் ?

NAME- AL-SHIFA AYUSH AGENCY
CURRENT ACCOUNT NO 267109000171971
BANK -CITY UNION BANK
BRANCK .KADYANALLUR
IFSC CODE   CIUB0000267

தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9688778640 


Post Comment

2 comments:

sakthi சொன்னது…

மிக்க நன்றி டாக்டர் சார் உங்கள் உழைப்பு ,மக்களுக்கு நல்லது செய்ய நீங்கள் எடுக்கும் கடின முயற்சிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது .நீங்கள் வாழ்க பல்லாண்டு ! நீங்கள் இந்த உலகிற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பொக்கிஷம் ,பரிசு ! மேலும் கூற வார்த்தைகள் போறாது !

Unknown சொன்னது…

உங்களைப் போன்ற தியாக மனப்பான்மை அனைத்து மருத்துவருக்கும் வரவேண்டும்

கருத்துரையிடுக